வசந்த காலம்
வசந்தம் சீக்கிரமே வருகிறது
ப்ளம் மரம் ஒரு இரவிலே பூத்துவிட்டது
பறவைகளின் ஒலியோடு இதமான காற்று
கிளறிய மண்ணில்
எல்லாப்பக்கங்களிலும் ஒளி படர்வதுபோல்
சூரியனின் ஓவியத்தை யாரோ ஒருவர் வரைந்துள்ளார்
ஆனால்
பின்னணி மண்ணாய் இருப்பதால்
சூரியன் கருப்பாகத் தெரிகிறது
அங்கே வரைந்தவரின் கையெழுத்துமில்லை
அச்சோ! விரைவில் எல்லாமே மறைந்துவிடும்
பறவைகளின் ஒலி,மென்மையான மலர்கள்
முடிவில்
மண் கூட வரைந்தவரின் பெயரை மறைத்துவிடும்.
போகட்டும்
சித்திரம் வரைந்தவரின் சிந்தையிலே
கொண்டாட்டத்தின் குதூகலம்
எத்தனை அழகு இந்த மலர்கள்
மலர்கள்………
வாழ்வை மீட்டெடுப்பதன் அடையாளச்சின்னங்கள்
ஆசையோடு வருகின்றன பறவைகள்.
நோபல் பரிசு பெற்ற Louise Elisabeth Glück (1943-2023) ன் Primavera என்கிற கவிதையின் தமிழ் வடிவம்