வசந்த காலம்

Photo: Wikimedia commons

வசந்த காலம்

வசந்தம் சீக்கிரமே வருகிறது

ப்ளம் மரம் ஒரு இரவிலே பூத்துவிட்டது

பறவைகளின் ஒலியோடு இதமான காற்று

கிளறிய மண்ணில்

எல்லாப்பக்கங்களிலும் ஒளி படர்வதுபோல்

சூரியனின் ஓவியத்தை யாரோ ஒருவர் வரைந்துள்ளார்

ஆனால்

பின்னணி மண்ணாய் இருப்பதால்

சூரியன் கருப்பாகத் தெரிகிறது

அங்கே வரைந்தவரின் கையெழுத்துமில்லை

அச்சோ! விரைவில் எல்லாமே மறைந்துவிடும்

பறவைகளின் ஒலி,மென்மையான மலர்கள்

முடிவில்

மண் கூட வரைந்தவரின் பெயரை மறைத்துவிடும்.

போகட்டும்

சித்திரம் வரைந்தவரின் சிந்தையிலே

கொண்டாட்டத்தின் குதூகலம்

எத்தனை அழகு இந்த மலர்கள்

மலர்கள்………

வாழ்வை மீட்டெடுப்பதன் அடையாளச்சின்னங்கள்

ஆசையோடு வருகின்றன பறவைகள்.


நோபல் பரிசு பெற்ற Louise Elisabeth Glück (1943-2023) ன் Primavera என்கிற கவிதையின் தமிழ் வடிவம்

This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a comment