Monthly Archives: December 2017

அற்புதப் பத்து – வாரம் ஒரு வாசகம் – 41

41.அற்புதப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்.3: நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து நான் எனது எனும் மாயம் கடித்த வாயிலே நின்று முன்வினை மிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன் நின்று அப்பெருமறை தேடிய அரும் பொருள் அடியேனை அடித்து அடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே. ****** இம்மண்ணுலகில் நல்லவன் போல் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

குலாப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 40

40.குலாப்பத்து (தில்லையில் அருளியது) பாடல்: 7 மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் எனக் களித்து இங்கு அதிர்க்கும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டு அன்றே. ******* உலகில் நிகரில்லா அரக்கன் இராவணன் மக்களால் மதிக்கப்பட்டவன் உன் திருவடிகள் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்புலம்பல் – வாரம் ஒரு வாசகம் – 39

39.திருப்புலம்பல் (திருவாரூரில் அருளியது) பாடல் 3: உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குறை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே. ***** குற்றாலத்தில் குடி அமர்ந்த ஆடலரசே! எனக்கு உறவினர் யாரும் வேண்டாம் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திரு ஏசறவு – வாரம் ஒரு வாசகம் – 38

38.திரு ஏசறவு (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்.5: கற்று அறியேன் கலை ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே. ***** எம்பெருமானே! நான் ஞானம் தரும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

பிடித்த பத்து – வாரம் ஒரு வாசகம் – 37

37.பிடித்த பத்து (திருத்தோணிபுரத்தில் அருளியது) பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.. ***** குழந்தை அழும்முன்னே காலமறிந்து பசியாற்றும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment